Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/குடிநீர்  குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி

குடிநீர்  குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி

குடிநீர்  குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி

குடிநீர்  குழாய் அமைக்க செங்கை நகராட்சி அனுமதி

ADDED : ஜன 18, 2024 01:46 AM


Google News
செங்கல்பட்டு:தட்டான்மலை பகுதியில், குடிநீர் பிரதான குழாய் அமைக்க, நகராட்சி அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், தட்டான்மலை பகுதியில், புதிதாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 1 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் துவங்கி நிறைவு பெற்றன.

தற்போது குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில், குடிநீர் பிரதான குழாய் மட்டுமே அமைப்பதற்கு, மட்டும் இடம் பெற்றுள்ளது.

இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, வார்டு எண்கள்; 5, 8, 9, 10 ஆகிய வார்டுகளில், அமைந்துள்ள தெருக்களுக்கு, குடிநீர் பிரதான குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான மதிப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாய் தயார் செய்து, நகராட்சி கூட்டத்தில், அனுமதிக்கு வைக்கப்பட்டது. இப்பணிகள் செயல்படுத்த, நகராட்சி அனுமதி அளித்து, தீர்மானம் நிறைவேற்றியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us