Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செய்யூர் --- போளூர் சாலை பணி கெடுவிற்குள் முடிக்க உத்தரவு

செய்யூர் --- போளூர் சாலை பணி கெடுவிற்குள் முடிக்க உத்தரவு

செய்யூர் --- போளூர் சாலை பணி கெடுவிற்குள் முடிக்க உத்தரவு

செய்யூர் --- போளூர் சாலை பணி கெடுவிற்குள் முடிக்க உத்தரவு

ADDED : ஜன 30, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
செய்யூர் : சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக, செய்யூர் - வந்தவாசி -- சேத்துப்பட்டு -- போளூர் சாலை, இருவழித்தடமாக மாற்றப்படுகிறது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 37 கி.மீ., நீளமும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 72 கி.மீ., நீளமும் அகலப்படுத்தப்படுகிறது. இப்பணி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலமாக நடக்கிறது.

இத்திட்டத்தில், ஐந்து உயர்மட்ட பாலங்கள், 12 சிறுபாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 214 வாய்க்கால் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

சாலை பணி 94.5 சதவீதம் முடிந்து உள்ள நிலையில், செய்யூர் பகுதியில், சாலை பணிகளை தலைமை பொறியாளர் செல்வன் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, சாலை பணிகள் நடந்த வரும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலை பணியை ஒப்பந்தக் காலத்துக்குள் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us