Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரேஷன் கார்டு திருத்தம் செங்கையில் நாளை முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் செங்கையில் நாளை முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் செங்கையில் நாளை முகாம்

ரேஷன் கார்டு திருத்தம் செங்கையில் நாளை முகாம்

UPDATED : செப் 12, 2025 11:43 AMADDED : செப் 11, 2025 09:39 PM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தா லுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.

அதன்படி, ஆறு தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில், 13ம் தேதி சனிக்கிழமை, சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், கார்டுதாரர்கள் தகுந்த ஆவணங்கள் கொடுத்து, தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us