Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

ADDED : ஜூலை 01, 2025 09:32 PM


Google News
திருப்போரூர்:திருப்போரூர், ஆலத்துார் பகுதிகளில் நாளை, 30 இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைமலை நகர் மின் கோட்டம், திருப்போரூர் உப கோட்டத்தில் உள்ள திருப்போரூர் மற்றும் ஆலத்துார் ஆகிய இடங்களில் உள்ள 110/33-11 கே.வி., துணைமின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளன.

இதனால் திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலுார், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்துார், அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இதுதவிர காலவாக்கம், ஆலத்துார் சிட்கோ, கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனுார், கூத்தவாக்கம் சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

ஆலத்துார், தேவனேரி, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான் குப்பம், கேளம்பாக்கம் ஒரு பகுதி, தையூர் ஒரு பகுதி, மாமல்லபுரம் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறைமலை நகர்


காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மறைமலை நகர் என்.ஹெச் 1, 2, சாமியார் கேட் முதல் பேரமனுார் கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us