Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ADDED : செப் 07, 2025 10:34 PM


Google News
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகில் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் மூன்றாவது நடைமேடை அருகில், நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us