Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்

சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்

சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்

சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்

ADDED : செப் 07, 2025 10:33 PM


Google News
அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலம் பகுதியில், சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் அனந்தமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், 1,000த்திற்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.

இப்பகுதி மக்கள் தங்களின், இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், அச்சிறுபாக்கம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

எனவே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமுதாய நலக் கூடம், தற்போது, விரிசல் அடைந்து, பயன்பாடு இன்றி உள்ளது.

எனவே, இந்த சமுதாய நலக்கூடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில், புதிதாக உணவு பரிமாறும் இடம், சமையல் தயாரிப்பு கூடம் என அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக் கூடம் கட்டித்தர, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us