Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குட்டை நீரில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

குட்டை நீரில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

குட்டை நீரில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

குட்டை நீரில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

ADDED : செப் 21, 2025 11:08 PM


Google News
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் குட்டையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்.

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள நீர் வழிப்பாதை குட்டையில் உள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள் அழுகிய நிலையில் கிடந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us