Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பராமரிப்பற்ற நகராட்சி பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பராமரிப்பற்ற நகராட்சி பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பராமரிப்பற்ற நகராட்சி பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பராமரிப்பற்ற நகராட்சி பூங்கா சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 14, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு, ரங்கா நகர் பகுதியில், நகராட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2012 -- 13ல், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா அமைக்கப்பட்டது.

சுற்றுச்சுவர் அமைத்து மரம், செடி, கொடிகள் வைத்து, பூங்கா மேம்படுத்தப்பட்டது.

துவக்கத்தில் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் அதிக அளவில் வந்தனர்.

தற்போது, இந்த பூங்கா பராமரிப்பின்றி புற்கள் முளைத்து, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளன.

நடைபாதை சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும், பூங்காவுக்குள் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் குவிந்து, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

எனவே, இந்த பூங்காவை புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us