Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகள்

ADDED : பிப் 10, 2024 10:34 PM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருக்குறள் சார்ந்த அறிவுத்திறன் போட்டிகள், தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தன. பேரவை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள திருப்போரூர், தண்டலம் உட்பட 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 250 மாணவ - -மாணவியர் பங்கேற்றனர்.

திருக்குறள் சார்ந்த அறிவுத்திறன் போட்டியில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ- - மாணவியர், மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

பின், அவர்களுக்கு ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியம், எழுதுதல், வினாடி -- வினா உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us