Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சித்தாமூரில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூரில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூரில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூரில் நுாலகம் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
சித்தாமூர்:சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நுாலகம் இயங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்ட நுாலக கட்டடம் பராமரிப்பு இன்றி பழுதடைந்து மழைக்காலங்களில் கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள விரிசல் வழியாக மழைநீர் கசிந்து புத்தகங்கள் நனைகின்றன.

புத்தகங்களை அடுக்கி வைக்க போதிய ரேக்கு வசதி இல்லாததால், நுாலகத்திற்கு வரும் புதிய நுால்களை அடுக்கி வைக்க இடமின்றி மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வாசகர்கள் புத்தகங்கள் தேர்வு செய்வது கடினமாக உள்ளது. அமர்ந்து படிக்க போதிய இடவசதியும், இருக்கைகளும் இல்லாததால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள நுாலக கட்டடத்தை அகற்றி, புதிய நுாலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us