Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

வீடு புகுந்து 5 சவரன் நகை திருட்டு

ADDED : ஜன 30, 2024 11:26 PM


Google News
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திலகம், 50. இவர், நேற்று காலை 9:00 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டிவிட்டு, நுாறு நாள் வேலைக்கு சென்று உள்ளார்.

அதன்பின், வேலை முடிந்து மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த திலகம், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின், சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us