Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஆபத்து

ADDED : ஜன 09, 2024 09:26 PM


Google News
Latest Tamil News
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, கூடலுார் பகுதியில், 2,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 2 கி.மீ., துாரம் உள்ள கூடலுார் - கோவிந்தாபுரம் செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது.

இந்த சாலையை, கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மறைமலை நகர் வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில், சமீப காலமாக, அதிக அளவில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கூடலுார் ஏரிக்கரை மற்றும் சுற்றுப்பகுதியில், இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவு பொருட்களை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர்.

அருகில் உள்ள வனப்பகுதியிலும், குப்பை, பழைய மின் விளக்குகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், இந்த காடுகளில் உள்ள மயில், மான், முயல் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us