/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குட்கா பறிமுதல் ஒருவருக்கு 'காப்பு' குட்கா பறிமுதல் ஒருவருக்கு 'காப்பு'
குட்கா பறிமுதல் ஒருவருக்கு 'காப்பு'
குட்கா பறிமுதல் ஒருவருக்கு 'காப்பு'
குட்கா பறிமுதல் ஒருவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 19, 2025 06:43 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகே சட்ராஸ் மேப்ஸ் பிரதான சாலை பகுதிகளில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, சட்ராஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளில், போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது, நாராயணன், 60, என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 2.8 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.