Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ADDED : ஜூன் 18, 2025 07:05 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை நடக்கிறது.

முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்கள், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 5, 000 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.

வேலையளிப்பவர், வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ. ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வி தகுதியுடைய வேலை நாடுநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பங்கேற்கலாம். 18 வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் படத்துடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044 - 27426020 - 94868 70577- 93844 99848 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us