/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பேரிடர் கால தகவல் தொடர்பு 'ஹாம் ரேடியோ'வில் அழைக்கலாம்பேரிடர் கால தகவல் தொடர்பு 'ஹாம் ரேடியோ'வில் அழைக்கலாம்
பேரிடர் கால தகவல் தொடர்பு 'ஹாம் ரேடியோ'வில் அழைக்கலாம்
பேரிடர் கால தகவல் தொடர்பு 'ஹாம் ரேடியோ'வில் அழைக்கலாம்
பேரிடர் கால தகவல் தொடர்பு 'ஹாம் ரேடியோ'வில் அழைக்கலாம்
ADDED : பிப் 10, 2024 10:14 PM
மாமல்லபுரம்:சர்வதேச அளவில் தகவல் தொடர்பிற்காக, குறிப்பிட்ட அலைவரிசை எண்ணில், 'ஹாம் ரேடியோ' பயன்படுத்தப்படுகிறது. அவசர கால சூழலில், பிறவகை தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்தாலும், 'ஹாம் ரேடியோ' சாதனம் இயங்கி உதவும்.
ரேடியோ பயன்பாட்டாளர்கள், ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும், ரேடியோ வாயிலாக தொடர்பு கொள்வர்.
அனைவரும் ஒருங்கிணைந்து, 'வண்டு நெட் அமெச்சூர் ரேடியோ கிளப்' நடத்துகின்றனர்.
அதன் சார்பில், ஆண்டுதோறும் பிப்., 2ம் சனிக்கிழமையன்று, ஏதேனும் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.
நேற்று, மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அறிமுகமின்றி ரேடியோவில் மட்டுமே பேசி பழகியவர்கள், தங்களை அறிமுகப்படுத்தி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரேடியோ தொழில்நுட்ப முன்னேற்றம், எந்நேரத்திலும் எளிதில் தொடர்புகொள்ளும் நடைமுறை வசதி, விதிகளுக்குட்பட்டு முறையாக பயன்படுத்துவது, மத்திய அரசின் உரிமம் பெறும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
நீண்டகால பயன்பாட்டாளர்கள், தங்கள் ரேடியோ தொடர்பு அனுபவங்களை, புதியவர்களிடம் பகிர்ந்தனர். பேரிடர் அவசர சூழலில், மொபைல்போன் உள்ளிட்ட பிற தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்கும்.
அப்போது, தகவல் தொடர்பிற்கு, ரேடியோ பயன்பாட்டாளர்களை, பொதுமக்கள் அணுகுமாறும் தெரிவித்தனர். இதுகுறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.