/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாரடைப்பால் ஓட்டுனர் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஐவர் தப்பினர் மாரடைப்பால் ஓட்டுனர் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஐவர் தப்பினர்
மாரடைப்பால் ஓட்டுனர் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஐவர் தப்பினர்
மாரடைப்பால் ஓட்டுனர் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஐவர் தப்பினர்
மாரடைப்பால் ஓட்டுனர் உயிரிழப்பு அதிர்ஷ்டவசமாக ஐவர் தப்பினர்
ADDED : மே 20, 2025 09:19 PM
அச்சிறுபாக்கம்:சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 50; கார் ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், இரண்டு சிறுவர்களை, அவர்களுக்குச் சொந்தமான,'ஸ்விப்ட் டிசையர்' காரில், தாம்பரத்தில் இருந்து திருநாகேஸ்வரம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
காலை 11:30 மணியளவில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கம் அருகே கார் சென்ற போது, ஓட்டுநர் கண்ணனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர இரும்பு தடுப்பில் மோதி நின்றது.
உடனே அங்கிருந்தோர், காரில் பயணம் செய்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
பின், அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து கார் ஓட்டுநரை பரிசோதித்த போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது.
பின், உடனை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த குடும்பத்தினர் ஐந்து பேர், சிறு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.