Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் சுற்றி திரியும் மாடுகள் கட்டுப்படுத்த வேண்டுகோள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகள் கட்டுப்படுத்த வேண்டுகோள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகள் கட்டுப்படுத்த வேண்டுகோள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகள் கட்டுப்படுத்த வேண்டுகோள்

ADDED : ஜூன் 28, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் வேதாசலம் நகர், மேட்டுத்தெரு, அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், காஞ்சிபுரம் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.

நகராட்சி பகுதியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 15 பள்ளிகள் உள்ளன.

இங்கு, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், சாலையில் நடந்து செல்கின்றனர்.

அப்போது, சாலையில் திரியும் மாடுகள், மாணவர்களை விரட்டுகின்றன. இதனால், பயந்து ஓடி விழுந்து காயமடைகின்றனர். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் மாடுகள் விரட்டுவதால், விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால், பலர் படுகாயமடைகின்றனர்.

இதை கட்டுப்படுத்த, மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், இந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பெரிய விபத்துகள் நடப்பதற்குள், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us