/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிஉயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ADDED : பிப் 10, 2024 10:33 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், நெல்லி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில், 30,000 லிட்டர் கொள்ளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் ஆன நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால், குடிநீர் தொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அவ்வழியே நடந்து செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.