Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைப்பு

ADDED : ஜூன் 07, 2024 12:30 AM


Google News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஆத்துார் சுங்கச்சாவடி அருகே, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில், நாள்தோறும் அப்பகுதிவாசிகளால் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் வகையில், அரசு புறம்போக்கு நிலப் பாதுகாப்பு திட்டம் 2023- - 24ன் கீழ், நிலம் அளவீடு செய்யப்பட்டு, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us