Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ADDED : ஜூலை 09, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
ஆவடி: கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ், 38; இந்திய ராணுவ வீரர்.

இவர், கடந்த மே 10ம் தேதி இரவு, அதீத மது போதையில், படுக்கை அறையில் படுத்திருந்தார்.அவரது மனைவி லீமா ரோஸ் மேரி, 36, அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்தது தெரிந்தது.

ஆவடி முத்தாபுதுப் பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில், அவரது மனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்:

என் கணவர், தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து, என்னிடம் தகராறில் ஈடுபட்டார். என் பெற்றோரையும் அவதுாறாகபேசினார்.

இதனால் ஆத்திர மடைந்த நான், சம்பவ தினத்தன்று மது போதையில் படுத்திருந்த அவரை, புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

இவ்வாறு, வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், லீமா ரோஸ் மேரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us