/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை
பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை
பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை
பள்ளி குழந்தைகள் மாயம் செங்கை போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 09, 2024 06:18 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலன், 31. ஆட்டோ ஓட்டுனர். இவருக்கு ஆர்த்தி, 30, என்பவருடன் திருமணமாகி, 11 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இரு குழந்தைகளும், ஒழலுார் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, ஒராண்டாக வேலனும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள், வேலனுடன் வசித்தனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றகுழந்தைகளை, மதியம் உணவு இடைவேளையின் போது, காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
பள்ளியில் குழந்தைகள் இல்லாததை கவனித்த ஆசிரியர்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் வேலனுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,ஆசிரியர்களிடம்விசாரணை நடத்திவருகின்றனர்.
பள்ளியின்அருகில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.