/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிழிந்து தொங்கும் தற்காலிக கூரை அச்சிறுபாக்கம் பஸ் பயணியர் அவதி கிழிந்து தொங்கும் தற்காலிக கூரை அச்சிறுபாக்கம் பஸ் பயணியர் அவதி
கிழிந்து தொங்கும் தற்காலிக கூரை அச்சிறுபாக்கம் பஸ் பயணியர் அவதி
கிழிந்து தொங்கும் தற்காலிக கூரை அச்சிறுபாக்கம் பஸ் பயணியர் அவதி
கிழிந்து தொங்கும் தற்காலிக கூரை அச்சிறுபாக்கம் பஸ் பயணியர் அவதி
ADDED : ஜூலை 28, 2024 02:16 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் புறவழிச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், தற்காலிகமாக கிரீன் துணியால் அமைக்கப்பட்ட நிழற் குடையை சீரமைக்க,பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலைஉள்ளது.
இங்கு, சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த பேருந்து நிறுத்தத்தில் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பேருந்துகள், பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை யிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்கு வரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்ததால், பயணியர்காயமடைந்து வந்தனர்.
இதை தவிர்க்கும்விதமாக, 100 அடி துாரத்தில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, கோடை வெயிலின்காரணமாக, பயணியரின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், கிரீன் துணியால் தற்காலிக கூரை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்ததற்காலிக கூரை காற்றில் கிழிந்து தொங்குகின்றன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக கிரீன் துணியாலான கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.