/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 15, 2024 05:47 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே பெரும்பாக்கம் ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓடு போட்ட கட்டடத்தில் வகுப்பறை இயங்கி வந்தது. இந்நிலையில் கட்டடம் பழுதடைந்ததால், மாணவர்களின் நலன் கருதி, புதிதாக பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது, புதிய கட்டடத்தில் பள்ளி செயல்படுகிறது. பழைய கட்டடத்தில் பழுதடைந்த பொருட்கள், மேஜை, சேர் போன்றவை வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், கட்டடம் இடிந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.