/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை ஜமாபந்தி வரும் 12ல் துவக்கம் செங்கை ஜமாபந்தி வரும் 12ல் துவக்கம்
செங்கை ஜமாபந்தி வரும் 12ல் துவக்கம்
செங்கை ஜமாபந்தி வரும் 12ல் துவக்கம்
செங்கை ஜமாபந்தி வரும் 12ல் துவக்கம்
ADDED : ஜூன் 01, 2024 04:01 AM
மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய் தீர்வாய 'ஜமாபந்தி'யை, ஜூன் 12ம் தேதி துவக்க முடிவெடுத்து, கலெக்டர் அருண்ராஜ், தாலுகா தோறும் ஜமாபந்தி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வருவாய்த் துறை, ஆண்டு பசலி வருவாய் தீர்வாய 'ஜமாபந்தி'யை, அனைத்து தாலுகாக்களிலும், ஆண்டுதோறும் நடத்துகிறது.அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், கிராமத்தின் பதிவு கணக்குகளை தணிக்கை செய்வர்.
பொதுமக்கள், மனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்டவை கோரி மனுக்கள் அளிப்பர்.
அதையொட்டி, 1433ம் பசலி ஆண்டு, 'ஜமாபந்தி' வருவாய் தீர்வாயம், மே மாத இறுதியில் துவக்கி இருக்க வேண்டும்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டு எண்ணப்படும் ஜூன் 4ம் தேதி வரை அமலில் உள்ளதால், ஜமாபந்தி நடத்துவது தாமதமானது.
இந்நிலையில், 'ஜமாபந்தி'யை வரும் 12ம் தேதி துவக்கி, ஜூன் 28ம் தேதி வரை நடத்த முடிவெடுத்து, தாலுகா தோறும் அதற்கானஅலுவலர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ்உத்தரவிட்டுள்ளார்.