Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

பயனற்ற நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டுகோள்

ADDED : ஜூன் 10, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
சித்தாமூர் : சித்தாமூர் அருகே சிறுநல்லுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில், மாரியம்மன் கோவில் எதிரே, 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி சேதமடைந்து, தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.

சில மாதங்களுக்கு முன், புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, தற்போது குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சேதமடைந்த மேல்நிலைத் தேக்கத்தொட்டி அகற்றப்படாமல் உள்ளதால், குடியிருப்புகள் மீது சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை தேக்கத் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us