/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி
பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி
பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி
பேனா மூடியை விழுங்கி கைதி தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 28, 2024 11:37 PM
புழல் : புழல் மத்திய சிறையில் விசாரணை, மகளிர் மற்றும் தண்டனை என, 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, எண்ணுாரைச் சேர்ந்த பாபுலால், 35, என்பவர், ரயில்வே பொருட்களை திருடியதாக, சென்ட்ரல் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் பாபுலால், நேற்று பிளேடு துண்டு மற்றும் பேனா மூடி ஆகியவற்றை விழுங்கி, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கியவரை, சிறை அதிகாரிகள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
இதனிடையே புழல் சிறையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணிகண்டன், 40, என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், வெங்கடேஷ், 42, ஆகாஷ், 38, ஆகியோரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.