Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 12, 2024 09:00 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய கலெக்டர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீடு திட்டம் 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்' என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செய்ல்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2034 -- 25ல், சம்பா- சிறப்பு மற்றும் ராபி மற்றும் பருவ பயிருக்கு காப்பீடு செய்யலாம்.

மேலும், www.pmfby.gov.in என்ற இணையதளம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தையோ அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us