Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சதுரங்கப்பட்டினம் பகுதியில் தீப்பற்றி கருகிய பனைமரங்கள்

சதுரங்கப்பட்டினம் பகுதியில் தீப்பற்றி கருகிய பனைமரங்கள்

சதுரங்கப்பட்டினம் பகுதியில் தீப்பற்றி கருகிய பனைமரங்கள்

சதுரங்கப்பட்டினம் பகுதியில் தீப்பற்றி கருகிய பனைமரங்கள்

ADDED : ஜூன் 03, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
புதுப்பட்டினம், : கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் - புதுச்சேரி சாலை பகுதியில், சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தில், வளர்ந்துவரும் சிறிய பனைமரங்கள் உள்ளன.

அதே பகுதியில், புதரும் வளர்ந்து வெயிலில் காய்ந்திருந்தன. நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, புதரில் தீப்பற்றி, அப்பகுதி முழுதும் பரவியது. பனை மரங்களிலும் தீ பரவி, 150க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. புதுச்சேரி சாலையில் புகை பரவி, வாகனத்தில் சென்றவர்கள் திணறினர்.

கல்பாக்கம், மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மாநில தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரத்திற்கும் மேல் தண்ணீரை பீய்ச்சி, மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us