ADDED : ஜூலை 17, 2024 01:00 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தெரு நாய்களின் தொல்லை குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, அனகாபுத்துார், பாரதி புரம், குண்டுமேடு பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை, 250 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில், 244நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு உள்ளது.