Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காட்டாங்கொளத்துாரில் 19ல் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்'

காட்டாங்கொளத்துாரில் 19ல் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்'

காட்டாங்கொளத்துாரில் 19ல் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்'

காட்டாங்கொளத்துாரில் 19ல் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்'

ADDED : ஜூன் 17, 2024 02:56 AM


Google News
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வரும் 19ம் தேதி, உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இத்திட்டத்தை செயலாக்கும் நோக்கில், செங்கல்பட்டு தாலுகாவில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், அனைத்து துறை அலுவலர்களும், வரும் 19ம் தேதி, அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கலெக்டர் அருண்ராஜை பொதுமக்கள் நேரடியாக சந்தித்து, கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us