Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

ADDED : ஜூன் 18, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
சென்னை, :செம்மஞ்சேரி அம்பேத்கர் விளையாட்டு குழு சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் தொடர் கபடி போட்டி, நேற்று முன்தினம் முடிந்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து, 60 குழுக்கள் பங்கேற்றன. இதில், முதல் எட்டுஇடங்கள் பிடித்த குழுக்களுக்கு, பரிசு மற்றும்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இ.சி.ஆர்.,சின்னாண்டி குப்பத்தில்உள்ள அலை ஓசைஎன்ற குழு, முதல் பரிசு பெற்றது.

செம்மஞ்சேரி அம்பேத்கர் கபடி குழு இரண்டாம் பரிசும், பொழிச்சலுார் பகுதியில் உள்ள பொழிச்சை பிரண்ட்ஸ் குழு, மூன்றாம் பரிசையும் வென்றன.

அசோக் பிரதர்ஸ், அனிஷ் பிரதர்ஸ், சி.எப்.சி., நீலாங்கரை மற்றும் செம்மை பிரண்ட்ஸ் ஆகிய குழுக்கள், சிறப்பு பரிசு பெற்றன. அனைவருக்கும் சான்றிதழ்வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us