Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முதுகரையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

முதுகரையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

முதுகரையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

முதுகரையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 22, 2024 06:49 AM


Google News
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த முதுகரை ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த பேருந்து நிறுத்தத்தை, சிறுநல்லுார், வசந்தவாடி, முதுகரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மதுராந்தகம், கூவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.

தினசரி ஏராளமான பொதுமக்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்துக்காக வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மழை காலத்தில் பேருந்து நிறுத்தம் அருகே மழைநீர் தேங்குகிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்,

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முதுகரையில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us