ADDED : ஜூலை 19, 2024 12:14 AM
செம்மஞ்சேரி:சோழிங்க நல்லுாரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், 10 ஆண்டு களாக கண்ணாடியைசுத்தம் செய்யும் பணி செய்தவர் சூர்யா, 36.
இவர், கடந்த 8ம் தேதி, அங்குள்ள நீச்சல் குளத்தில் உள்ள 20 அடி உயரத்தில் இருந்த கண்ணாடியை சுத்தம் செய்தபோது, கண்ணாடி உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்து, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சைபலனின்றி பலியானார்.