/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு
போதைப்பொருள் தடுப்பு சித்தாமூரில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 16, 2024 05:02 AM

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு பயிலும் மாணவ- - மாணவியருக்கு, செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பள்ளி மாணவ- - மாணவியர், சித்தாமூரின் முக்கிய வீதிகளில், மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பேரணியாக சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் அமுதா தலைமையில் நடந்த இப்பேரணியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.