Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை பஸ் நிலையத்தில் தொடரும் இட பற்றாக்குறை

மாமல்லை பஸ் நிலையத்தில் தொடரும் இட பற்றாக்குறை

மாமல்லை பஸ் நிலையத்தில் தொடரும் இட பற்றாக்குறை

மாமல்லை பஸ் நிலையத்தில் தொடரும் இட பற்றாக்குறை

ADDED : ஜூலை 16, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
மாமல்லபுரம், : மாமல்லபுரம் பேருந்து நிலையம், ஸ்தலசயன பெருமாள் கோவிலின் முன்புறத்தில் உள்ள குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பேருந்துகளுடன், ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில், ஒரே நேரத்தில் பல பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், கோவிலின் திருத்தேர், முன்பு கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டது. அதன் நிறுத்துமிடம், வாஸ்து மற்றும் ஆகம நடைமுறை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, இடம் மாற்றி பேருந்து நிலைய பகுதி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. தேரைச் சுற்றி சற்று இடைவெளி விட்டு, பாதுகாப்பு கூரையும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன், பல பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மூன்று பேருந்துகள் வரை நிறுத்தக்கூடிய இடம், தற்போது தேர் நிறுத்தப்பட்டுள்ளதால் அடைபட்டுள்ளது.

ஒரே நேரத்தில், பல பேருந்துகள் வரும் சூழலில், நிலையத்தில் நிறுத்த இடமின்றி, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. அதனால், விபத்து அபாயமும் ஏற்படுகிறது.

எனவே, ஆட்டோக்கள், பேருந்துகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி நிறுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us