Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்துக்கு தொடருது வெடிகுண்டு மிரட்டல்

ADDED : ஜூன் 18, 2024 05:22 AM


Google News
சென்னை : சென்னை விமான நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு,இ - மெயில் வாயிலாக 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, ஒரு இ - மெயில் வந்தது.

அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும், அவை வெடித்து சிதறும் எனவும்தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, விமான நிலையஇயக்குனர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையில்,அவசர கூட்டம்நடத்தப்பட்டது.

வெடிகுண்டுசெயலிழப்பு குழுவினர் சோதனை நடத்தினர். விமான நிலையத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்தும், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளிஎன்பது தெரியவந்தது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வந்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார், பாதுகாப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

இரு வாரங்களில், சென்னை விமான நிலையத்துக்கு மொபைல் போன், இணையதளம்,'இ - மெயில்' வாயிலாக ஐந்தாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகளைகண்டறிந்து, உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us