/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையை கடந்தவர் கார் மோதி உயிரிழப்பு.. சாலையை கடந்தவர் கார் மோதி உயிரிழப்பு..
சாலையை கடந்தவர் கார் மோதி உயிரிழப்பு..
சாலையை கடந்தவர் கார் மோதி உயிரிழப்பு..
சாலையை கடந்தவர் கார் மோதி உயிரிழப்பு..
ADDED : ஜூன் 24, 2024 06:08 AM
கூடுவாஞ்சேரி: பூந்தமல்லி, கரையான்சாவடி சிப்பாய் சந்து, மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 47. இவர், ஊருக்கு சென்று, நேற்று அதிகாலை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், ஜி.எஸ்.டி., சாலையில் வந்திறங்கினார்.
பின், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வதற்காக, சாலையை கடந்த போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார், அவர் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட ஆறுமுகம், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த புகாரின்படி, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.