Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குன்றத்துாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

குன்றத்துாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

குன்றத்துாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

குன்றத்துாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

ADDED : ஜூன் 03, 2024 04:30 AM


Google News
குன்றத்துார் : குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் குன்றத்துார் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாரை பார்த்ததும் ஒரு கும்பல் தப்பியோடியது. துரத்தி பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

பிடிபட்டோர், பழந்தண்டலத்தைச் சேர்ந்த நவீன்குமார், 23, கோகேஷ் ரஜினி, 19, லோகிதாஸ், 19, எழிலரசன், 25, ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள், குன்றத்துார், பூந்தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us