ADDED : ஜூலை 09, 2024 11:42 PM
தாம்பரம்:நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் குமார், 47. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், மங்களாபுரத்தில் தங்கி, கிழக்கு தாம்பரத்தில், ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அவருடன், அதே ஊரை சேர்ந்த இரண்டு பேர் தங்கி, அவரது கடையில் வேலை செய்கின்றனர். ஜூலை, 5ம் தேதி, செயின், டாலர், மோதிரம் உள்ளிட்ட 13 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் , மொபைல் போன், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை, ஒரு பையில் போட்டு வீட்டு அலமாரியில் வைத்திருந்தார்.
நேற்று காலை, பையை எடுத்து பார்த்தபோது, அதிலிருந்த 13 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. பணம் உள்ளிட்ட மற்றவை இருந்தன.
இது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்தார். குமாருடன் தங்கியிருந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.