Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆமதாபாத்தில் 'ஒலிம்பிக் 2036'

ஆமதாபாத்தில் 'ஒலிம்பிக் 2036'

ஆமதாபாத்தில் 'ஒலிம்பிக் 2036'

ஆமதாபாத்தில் 'ஒலிம்பிக் 2036'

ADDED : ஜூலை 02, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
லாசேன்: வரும் 2036ல் ஆமதாபாத்தில் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டி நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்த இரு போட்டிகள் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன.

அடுத்து இந்தியாவில் இப்போட்டியை நடத்த முயற்சி நடக்கின்றன. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) 141 வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,'' வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த ஆர்வமாக உள்ளோம்,'' என்றார்.

இதையடுத்து ஒலிம்பிக், பாராலிம்பிக் நடத்த விண்ணப்பம் தெரிவித்து, ஐ.ஒ.சி., போட்டி நடத்தும் இடங்களை தேர்வு செய்யும் குழுவிடம், கடிதம் கொடுக்கப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தற்போது இந்தியாவின் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் நடத்த உள்ளதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இடம் பெற்ற குழுவினர் சார்பில், ஐ.ஒ.சி., கமிட்டியிடம் நேரில் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us