/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/விடைபெற்றார் கோலி * சர்வதேச 'டி-20' அரங்கில்...விடைபெற்றார் கோலி * சர்வதேச 'டி-20' அரங்கில்...
விடைபெற்றார் கோலி * சர்வதேச 'டி-20' அரங்கில்...
விடைபெற்றார் கோலி * சர்வதேச 'டி-20' அரங்கில்...
விடைபெற்றார் கோலி * சர்வதேச 'டி-20' அரங்கில்...
UPDATED : ஜூன் 30, 2024 01:09 AM
ADDED : ஜூன் 29, 2024 10:42 PM

பிரிட்ஜ்டவுன்: சர்வதேச 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி.
இந்திய அணி 'சீனியர்' கோலி 35. கடந்த 2022ல் 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்றதும் ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது. மீண்டும் வந்த கோலி, கடைசியாக இத்தொடரில் பங்கேற்றார். பைனலில் அரைசதம் விளாச, 2007க்கும் பின் இந்தியா 'டி-20' உலக கோப்பை வென்றது. இம்மகிழ்ச்சியில் சர்வதேச 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி.
பைனலில் ஆட்டநாயகன் ஆன இவர் கூறியது:
எனது கடைசி 'டி-20' உலக கோப்பை தொடர் இது. தவிர இந்தியாவுக்காக விளையாடும், எனது கடைசி 'டி-20' போட்டி. இதில் எப்படியும் வென்று, சாம்பியன் ஆக வேண்டும் என விரும்பினோம்.
ஏனெனில் ஐ.சி.சி., தொடரில் கோப்பை வெல்ல நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். ரோகித் 9 முறை, நான் 6 முறை 'டி-20' உலக கோப்பை தொடரில் விளையாடி உள்ளோம். அடுத்த தலைமுறை வீரர்கள், 'டி-20' போட்டியை முன்னெடுத்துச் செல்ல இது தான் சரியான நேரம். இந்தியா சாம்பியன் ஆன இந்த நாள் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
4,188
சர்வதேச 'டி-20' அரங்கில் கோலி, இந்திய அணிக்காக 125 போட்டியில் 4,188 ரன் (1 சதம், 38 அரைசதம்) எடுத்தார்.