Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை

ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை

ADDED : ஜூன் 07, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நியூயார்க்: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 'டி-20' உலக கோப்பை லீக் போட்டி, நாளை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கவுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் சவாலுக்கு தயாராகி வருகிறது. இந்த அணிக்கு எதிராக 6 'டி-20' போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா, 84 ரன் மட்டுமே எடுத்தார். பவுலிங்கில் 11 விக்கெட் சாய்த்துள்ளார்.

இதுகுறித்து பாண்ட்யா கூறுகையில்,''பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும். நாங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன். அணியாக இணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் களமிறங்குவோம். இது மோதலாக இருக்கப் போவதில்லை. ஒரு வரலாறாக அமையும்.

எங்களுக்கு மற்றொரு வெற்றி நாளாக அமையும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இது ஸ்பெஷலானது. மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாட முயற்சிப்பேன்,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us