/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/மலேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்மலேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
மலேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்
ADDED : மே 23, 2025 10:13 PM

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். முதல் செட்டை 24-22 என போராடி கைப்பற்றிய ஸ்ரீகாந்த், 2வது செட்டை 17-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட ஸ்ரீகாந்த் 22-20 என போராடி தன்வசப்படுத்தினார். ஒரு மணிநேரம், 14 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவ காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 22-24, 13-21 என சீனாவின் ஜியாங் பாங், வெய் யா ஜின் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.