
சினிமாவை விட சீரியல் தான் செட்டாகும்! திருச்செல்வத்துக்கு ரசிகர்களின் அன்பு வேண்டுகோள்
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், "கோலங்கள் தொடர் நன்றாக சென்றுகொண்டிருந்த போது எனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நான் இயக்கி நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும் சீரியலை விட்டு விலக எனக்கு மனமில்லை. எனவே, அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டடேன்" என்று கூறியுள்ளார்.
தற்போது திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடரும் பல தரப்பு மக்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாய்ஸ் ஹாஸ்டலில் கூட எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர். கோலங்கள் தொடரில் 400 எபிசோடுகளில் கிடைத்த புகழ் 150 எபிசோடுகளிலேயே தனக்கு கிடைத்துவிட்டதாக திருச்செல்வம் ஒருமுறை கூறியிருந்தார். இதைகுறிப்பிட்டு திருச்செல்வத்துக்கு சினிமாவை காட்டிலும் சீரியலே சிறப்பானதொரு களமாக இருக்கிறது என ரசிகர்கள் அவரை மோட்டிவேட் செய்து வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!