
சின்னத்திரையில் அம்மனாக ரீ என்ட்ரி தரும் ரச்சிதா!
ரச்சிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடரில் அம்மன் ரோலில் கேமியோவாக நடித்துள்ளார். செம்பருத்தி தொடரில் கடந்த சில வாரங்களாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சீரியல் கதாநாயகிகளை அம்மன் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரச்சிதாவும் ஒரு அம்மனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவர் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தான் அம்மனாக நடிக்கிறார் எனவும் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் அம்மனாக நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியுள்ள நிலையில் எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!