
எதிர்நீச்சல் 2வில் என்னை ஏமாத்திட்டாங்க!
இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த தொடர் "எதிர்நீச்சல்". பல்வேறு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடரில் பாட்டி கதாபாத்திரம் முதல் குழந்தை வரை அனைவருக்கும் தனித்துவமான இடமிருந்தது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தாராவுக்கும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது "எதிர்நீச்சல் சீசன் 2" விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதில் பல நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் குழந்தை தாராவும் ஒருவர்.
இந்நிலையில், குழந்தை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், "என்னை வேண்டுமென்றே மாற்றிவிட்டார்கள். நான் அழுதும் மனம் இறங்கவில்லை திருச்செல்வம் அங்கிள்" என செல்லமாக புகார் செய்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!