ADDED : செப் 21, 2025 11:13 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தர்மாபுரி சபரி நகர் மைதனாத்தில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டு வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தர்மாபுரி புதுத்தெருவைச் சேர்ந்த விஷ்வா, 22; என்பதும், அவர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டு குற்ற சம்பவ செயலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து ,அவரை கைது செய்தனர்.