Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூட்டி கிடக்கும் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது

பூட்டி கிடக்கும் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது

பூட்டி கிடக்கும் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது

பூட்டி கிடக்கும் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வருவது எப்போது

ADDED : மே 22, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
காரைக்கால்: காரைக்கால் அம்பாள் சமுத்திரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் அடுத்த அம்பாள் சமுத்திரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காமராஜர் சிறுவர் பூங்கா உள்ளது. பூங்கா போதிய பராமரிப்பின்றி, புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டதன் பேரில், நாஜிம் எம்.எல்.ஏ.,வின் தொடர் முயற்சியால், பூங்கா சீரமைக்கப்பட்டது.

மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ஊஞ்சல், சறுக்குமரம், நீர் வீழ்ச்சிகளுடன் புனரமைக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல், பூட்டி வைத்துள்ளனர். இதனால், பூங்கா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் சீரமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us