Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசநோய் தடுப்பு திட்டம் மத்திய அமைச்சர் ஆய்வு

காசநோய் தடுப்பு திட்டம் மத்திய அமைச்சர் ஆய்வு

காசநோய் தடுப்பு திட்டம் மத்திய அமைச்சர் ஆய்வு

காசநோய் தடுப்பு திட்டம் மத்திய அமைச்சர் ஆய்வு

ADDED : மே 30, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: இந்தியாவில் காசநோய், தட்டம்மை ரூபெல்லா தடுப்பு நடவடிக்கை குறித்து எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா வீடியோ கான்பரஸ் மூலம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மத்திய சுகாதார துறை அமைச்சர், 100 நாள் தீவிர காசநோய் முகாமின் போது 12.97 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 7.19 லட்சத்துக்கும் மேற்பட்ட காசநோய் நோயாளிகள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் அறிகுறியற்ற 2.85 லட்சம் பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆய்வுக்காக உற்சாகமாக பங்கேற்றனர். இது பாராட்டுக்குரியது.

இந்த பிரசாரம் நாடு முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் கைகோர்தாதல் காசநோய், தட்டம்மை, ரூபெல்லோ உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என, தெரிவித்தார்.

தொடர்ந்து காசநோய் பரிசோதனை, காச நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்களை எடுத்துக்கொள்வது, தேசிய சுகாதார கட்டமைப்பினை வலுப்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் காசநோய், தட்டம்மை ரூபெல்லா தடுப்பு குறித்து கேட்டறிந்தார்.

புதுச்சேரியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதார துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி, சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us