Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

ADDED : பிப் 06, 2024 06:06 AM


Google News
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் பிரதீப், 34; சிவில் இன்ஜினியர்.

இவர் தற்போது வடசேமபாளையம் வி.ஐ.பி., நகரில் புதிதாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி சேமபாளையத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தேவ பாண்டலம் வீட்டிற்குச் சென்றார்.

நேற்று மாலை சேமபாளையம் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை, வெள்ளி குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us